வெறுப்பேத்திய அனிதாவும், சிரித்து நழுவிய ரியோவும் – பிக்பாஸ் 59-ம் நாள்

 

வெறுப்பேத்திய அனிதாவும், சிரித்து நழுவிய ரியோவும் – பிக்பாஸ் 59-ம் நாள்

கால் செண்டர் டாஸ்க்கில் நிறைவு நாள்… அந்த டாஸ்க்கில் முரண்பாடுகள்… கருத்து மோதல்கள்… டாஸ்க்கில் பேசியதை வைத்து சண்டைகள்… டாஸ்க்கில் ஃபேவரைசம் பார்த்து என முணுமுணுப்புகள்… விடாக்கொண்டனாக கேள்விகளும் விட்டுக்கொடுக்காத பதில்களும்… இறுதியாக யாருக்கு எந்த வரிசை என போட்டி… என கொஞ்சம் சுவாரஸ்யமாகவும்… கொஞ்சம் இழுவையாகவும் சென்றது நேற்றைய எப்பிசோட்.

பிக்பாஸ் 59-ம்நாள்

ஜித்து ஜில்லாடி… என உற்சாகப் பாடலோடு ஹவுஸ்மேட்ஸை எழுப்பி விட்டார் பிக்கியின் தம்பி. காலை டாஸ்க் சோம்ஸ் பல வகைகளில் குமாரைச் சொல்லிக்காட்ட வேண்டும். (வேற ஆப்ஷனே இல்லையா பாஸ் உங்களுக்கு?)

வெறுப்பேத்திய அனிதாவும், சிரித்து நழுவிய ரியோவும் – பிக்பாஸ் 59-ம் நாள்

இதில் அர்ச்சனாவைக்கூப்பிட்டு செய்ய சொல்லி உட்காரும்போது ‘பாஸி குமார்’னு சொன்னதும் அர்ச்சனாவுக்கு கோபம் வந்துடுச்சு. இன்னொரு பக்கம் ஷனமை மசாஜ் செய்ய சொல்லி அதை காமெடியாக மாற்றியதும் அவருக்கு கோபம் வந்துடுச்சு… இந்த இரண்டு இல்லாட்டி மார்னிங் டாஸ்க்கை டெலிகாஸ்ட் பண்ணியிருக்க மாட்டாங்க போல. ரொம்ப போர்.

ஷிவானி ரம்யாவுக்கு போன் செய்தார். ‘நீங்க சாஃப்ட்டா ஹர்ட் பண்ணிடுறீங்கன்னு சொல்றாங்களேன்னு’ கேட்டது ‘நான் உண்மையைச் சொன்னேன்’என பாட்ஷாவாகினார் ரம்யா. இப்போதைக்கு யாரை நாமினேஷன் பண்ணுவீங்கன்னு கேட்டது ஆரி, ஆஜித்னு சொன்னதும் ஆஜித் முகம் சுருங்கியது.

ஃபைனலிஸ்ட் பட்டியலில் யார் யார் இருப்பார்கள்? என்றதற்கு, ‘ரம்யா, ஷிவானி, பாலா, ரியோ, சோம்ஸ் எனச் சொன்னார். இந்தப் பட்டியலில் மூவர் இருப்பதற்கான வாய்ப்பும் நியாயமும் இருக்கிறது. அதாவது ரம்யா, பாலா, ரியோ மற்றவர்கள் கொஞ்ச கஷ்டம்தான்.  கடைசி வரை ரம்யா போனைக் கட் பண்ணாததால் ஷிவானி நாமினேஷனுக்கு தள்ளப்பட்டார். இருந்தாலும் நட்பின் காரணமாக 5 ஸ்டார்ஸ் கொடுத்தார் ஷிவானி.

வெறுப்பேத்திய அனிதாவும், சிரித்து நழுவிய ரியோவும் – பிக்பாஸ் 59-ம் நாள்

அடுத்ததுதான் ஆட்டத்தின் பரபரப்பே தொடங்கியது. அனிதா போன் செய்தது ரியோவுக்கு. ஆரம்பத்தில் நார்மலாகக் கேட்கத் தொடங்கியவர் பிறகு சூடேறினார்.

‘குருப்பிஸம்’ என்றாலே கோபப்படுகிறீங்களே ஏன்? என்பதை இரண்டு நிமிடங்கள் நீட்டி முழக்கி உதாரணங்கள் எல்லாம் சொல்லி விளக்கி கேட்க, ‘யாரையும் தொந்தரவு செய்யாத குருப்பிஸம் இருக்கு’ என்றதும் ஏற்றுக்கொண்டார்.

அனிதாவின் நோக்கம், ரியோவை கோபம் வர வழைத்து போனை கட் பண்ண வைப்பது. அதற்காக இன்னும் உக்கிரமான கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். ‘ஹீரோ ரியோ பிம்பத்தை மெயின் கேட்டுக்கு வெளியே கழற்றி வைக்காமலே வந்துட்டீங்களா… அதே இமேஜோடு இருக்கீங்களா… அந்த இமேஜ் கலைந்திடும்னு கவலை படறீங்களா… என கிடுக்கி கேள்வி எல்லாம் கேட்டார். ஆனால், சுர் சுர்ருன்னு வர கோபத்தை கட்டுப்படுத்திட்டு பதில்கள் சொல்லி சமாளித்தார் ரியோ.

வெறுப்பேத்திய அனிதாவும், சிரித்து நழுவிய ரியோவும் – பிக்பாஸ் 59-ம் நாள்

பிக்பாஸ் ஆரம்பித்த முதல் வாரம், இரண்டாம், மூன்றாம் வாரம் என வரிசையாக ஒவ்வொரு வாரத்துக்கும் கேள்விகளாகக் கேட்டு அசர வைத்தார் அனிதா. ஆஜித்திடம் ஏன் போன் செய்யப்போவதைச் சொன்னீங்க என்பது உட்பட. ஆனால், நாமாக போனை வைத்துவிடக்கூடாது என வீம்போடு காத்திருந்தார் ரியோ.

அனிதாவின் நோக்கம், எவிக்‌ஷனிலிருந்து தப்பிப்பது என்றால், வேறு வகையில் இதைக் கையாண்டிருப்பார். அவரின் இலக்கு ரியோவை கோபப்படுத்தி, அவரின் இமேஜை தகர்ப்பது… தன் பழிவாங்கலை வேறு வகையில் தொடர்வது… மேலும், இரண்டு மூன்று முறை எவிக்‌ஷனலிருந்து தப்பியதும் கமல் பாராட்டியதும் தனக்கு ரசிகர்கள் செல்வாக்கு இருக்கு என்று முழுதாக நம்பியதுமே இப்படிப் பேச காரணமாயிற்று.

அனிதாவின் தந்திரங்களைப் புரிந்த ரியோ இறுதிவரை போனை கட் பண்ணாமல், நாமினேஷனுக்குத் தள்ளினார். அதுவே சரியான தந்திரம். ரியோவுக்கு 4 ஸ்டார் கொடுத்தார் அனிதா. வெளியே வந்த ரியோ, ஆஜித்திடம் மன்னிப்பு கேட்டார். அனிதா நன்றி சொன்னார். சோம்ஸிடம் ‘என்னை போக் பண்ணும்விதமாகத்தான் கேள்வி கேட்டார் என்று கோபப்பட்டார்.

வெறுப்பேத்திய அனிதாவும், சிரித்து நழுவிய ரியோவும் – பிக்பாஸ் 59-ம் நாள்

அடுத்து, நிஷாவுக்குப் போன் செய்தது ரமேஷ். எப்படி இந்த உரையாடல் போகும் எனப் பலரும் யூகித்ததுபோலவே சென்றது.  ஆஜித்தின் எவிக்‌ஷன் கார்டு பஞ்சாயத்து, பர்பிள் கார்டு பஞ்சாயத்து என பழைய விஷயங்களை, பேரளவில் கிளறிவிட்டிருந்தார் ரமேஷ். அதை மெல்ல சமாளித்து பதில் சொன்னார் நிஷா.

ரமேஷ், ஓரிரு கேள்விகளே தயாரித்து வந்ததால் ‘அப்பறம் என்ன கேட்கிறதுன்னு குழம்பினார்’ இறுதியாக எல்லோரும் எதிர்பார்த்ததுபோல, நிஷாவே போனை கட் பண்ணி, ரமேஷை காப்பாற்றினார். நிஷாவுக்கும் 4 ஸ்டார் கிடைத்தது.

’ரொம்ப சாதாரணமான கேள்விகளுக்கே நிஷா வருத்தப்பட்டார். ஒருவேளை அனிதா போன் பண்ணியிருந்தால், கால் செண்டரே அழுகை செண்டராக மாறியிருக்கும் போல.

வெறுப்பேத்திய அனிதாவும், சிரித்து நழுவிய ரியோவும் – பிக்பாஸ் 59-ம் நாள்

ஒருவழியாக கால் செண்டர் டாஸ்க்குக்கு எண்ட் கார்டு போட்டார் பிக்பாஸ். அப்பாடா என்றதும் ஹவுஸ்மேட்ஸ் மட்டுமல்ல… ஆடியன்ஸூம்தான். ஏனெனில், இதை சுவாரஸ்யமாக ஆடியது ஓரிருவர்தான். பாலா எப்போதும்போல டாஸ்க்கை தவறாகப் புரிந்துகொண்டு ஆடினார். கால் அட்டெண்ட் பண்ணுபவர் பதில் சொல்ல முடியாமல் திணறி போனை வைக்க வேண்டும் என்பதே டாஸ்க். ஆனா, இவர் ஒரு பேப்பரில் எழுதிகொண்டுபோய் ஒப்பிச்சிட்டு வந்துட்டார். சிலர் குருப் உறுப்பினர்களைக் காப்பாற்ற லேசாக பேசி வைத்தனர். சிலர் சிலரைக் காப்பாற்ற வலியக்க போனை கட் பண்ணினர்.

கால் செண்டர் டாஸ்க்கில் பர்ஃபாமன்ஸ் அடிப்படையில் யாருக்கு எந்த இடம் என 1 முதல் 13 எண்களை அனுப்பியிருந்தார் பிக்கி. அதற்கான விவாதத்தின் தொடக்கமே ஷனமுக்கும் ரமேஷூக்கும் சண்டை வந்துவிட்டது. ஆரி ஒரு போக்கில் வரிசைப்படுத்தலைக் கொண்டுபோக நினைக்கிறார். ஆனால், ஒவ்வொருவரும் தாங்கள் பேசிய விதத்தை வைத்து வரிசைப்படுத்தலைக் கொண்டு போக திட்டமிடுகின்றன.

வெறுப்பேத்திய அனிதாவும், சிரித்து நழுவிய ரியோவும் – பிக்பாஸ் 59-ம் நாள்

2-ம் இடத்தில் அனிதா ஆடாமல், அசையால் நிற்பதைப் பார்த்தால் இன்றைக்கு சில கண்டண்ட் தேறலாம். அதனால், விரிவாகக் காட்ட வேண்டும் என்பதால் பிக்பாஸ் நேற்றைய எப்பிசோட்டுக்கு நாள் முடிவதற்குள்ளேயே சுபம் போட்டார். இன்று அதன் தொடர்ச்சியில் சில சண்டைகள் நடக்கலாம்.