‘இதுவரை இல்லாத அளவிற்கு’.. புதுச்சேரியில் மேலும் 59 பேருக்கு கொரோனா உறுதி!

 

‘இதுவரை இல்லாத அளவிற்கு’.. புதுச்சேரியில் மேலும் 59 பேருக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 22 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதாவது, முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ. 200 அபராதம் என்றும் கடைகள் மற்றும் மது கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

‘இதுவரை இல்லாத அளவிற்கு’.. புதுச்சேரியில் மேலும் 59 பேருக்கு கொரோனா உறுதி!

அதேபோல் உணவு விடுதிகளில் மதியம் 2 மணி வரை மட்டுமே அமர்ந்து சாப்பிடலாம் என்றும் இரவு 9 மணி வரை பார்சல் வழங்கலாம் என்றும் கூறப்பட்டது. புதுச்சேரி கடற்கரையில் 10 நாட்களுக்கு யாரும் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் தொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் பெரிய மார்க்கெட்டில் செயல்பட்டுவந்த காய்கறி அங்காடி புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார். அதன் படி, தற்போது முதல்வர் அறிவித்த கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவிற்கு மேலும் 59 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 461 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 176 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.