மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்த பெற்றோர்: உசிலம்பட்டியை உலுக்கி எடுத்த சோகம்

 

மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்த பெற்றோர்: உசிலம்பட்டியை உலுக்கி எடுத்த சோகம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டியை உலுக்கி எடுத்திருக்கிறது.

மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்த பெற்றோர்: உசிலம்பட்டியை உலுக்கி எடுத்த சோகம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகை பட்டறை நடத்தி வந்தவர் சரவணன். இவரது மனைவியின் ஸ்ரீநிதி. இவர்களுக்கு மகாலட்சுமி(10), அபிராமி(5) என்ற இரு மகள்களும், அமுதன்(5) என்ற ஒரு மகனும் இருந்தனர்.

கடந்த 20 வருடங்களாக நகைப்பட்டறை நடத்தி வந்துள்ளார் சரவணன். கடன் பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்துள்ளன.

மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்த பெற்றோர்: உசிலம்பட்டியை உலுக்கி எடுத்த சோகம்

இந்நிலையில் இன்று அதிகாலையில் சரவணன், ஸ்ரீநிதி இருவரும் தங்கள் மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தாங்களும் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.

இறப்பதற்கு முன்பு சரவணன் – ஸ்ரீநிதி எழுதி வைத்திருக்கும் கடிதத்தில், கடன் பிரச்சனை காரணமாக நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம் என்று எழுதி வைத்துள்ளனர்.

மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்த பெற்றோர்: உசிலம்பட்டியை உலுக்கி எடுத்த சோகம்

இந்த கடிதத்தினை கைப்பற்றிய போலீசார் கடன் நெருக்கடி ஏன் ஏற்பட்டது? யார் நெருக்கடி கொடுத்தது? என்பதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

கடன் பிரச்சனையினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தி இருக்கிறது.