தர்மபுரி: இந்து முன்னணியை சேர்ந்த 52 பேர் மீது வழக்குப்பதிவு
Oct 26, 2020, 16:21 IST1603709471000
தர்மபுரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் 52 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தர்மபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே நேற்று, விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவனை கண்டித்து, இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுப்பிரமணி, பாஜக மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட 52 பேர் மீது தர்மபுரி பி1 காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.