தமிழகத்துக்கு மேலும் 5,27,210 கொரோனா தடுப்பூசிகள்!

 

தமிழகத்துக்கு மேலும் 5,27,210 கொரோனா தடுப்பூசிகள்!

தமிழகத்துக்கு மேலும் 5,27,210 கொரோனா தடுப்பூசிகள் விமானத்தில் இன்று சென்னை வருகின்றன.

தமிழகத்துக்கு மேலும் 5,27,210 கொரோனா தடுப்பூசிகள்!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 6,894 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24லட்சத்து 36ஆயிரத்து 819ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 194 பேர் உயிரிழந்த கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 580ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரை 23,48,353 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஓரளவு வெற்றியை கண்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் தெரிவித்துள்ள தமிழக அரசு, 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்துக்கு மேலும் 5,27,210 கொரோனா தடுப்பூசிகள்!

இந்நிலையில் தமிழகத்துக்கு மேலும் 5,27,210 கொரோனா தடுப்பூசிகள் விமானத்தில் இன்று சென்னை வருகின்றன.இன்று காலை 60,000 கோவாக்சின் தடுப்பூசிகள், மாலையில் 4,67,210 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வருகின்றன.முன்னதாக நேற்று ஐதராபாத்திலிருந்து விமானம் மூலம் 3,10,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன.இதில் 2,21,090 தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கும், 88,910 தடுப்பூசிகள் சென்னை பெரியமேட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டன.