காவிரியில் 52,300 கனஅடிநீர் திறப்பு… வெள்ள எச்சரிக்கை!

 

காவிரியில் 52,300 கனஅடிநீர் திறப்பு… வெள்ள எச்சரிக்கை!

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதையொட்டி 52,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரியில் 52,300 கனஅடிநீர் திறப்பு… வெள்ள எச்சரிக்கை!
கர்நாடகாவில் பருவமழை நன்கு பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையிலிருந்து நொடிக்கு 50,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரியில் 52,300 கனஅடிநீர் திறப்பு… வெள்ள எச்சரிக்கை!

கிருஷ்ணராஜ சாகர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. அங்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் காவிரி நுழையும் தர்மபுரி மாவட்டத்தில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி தண்டோரா மூலம் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.