தமிழகத்தில் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்- தமிழக அரசு அதிரடி

 

தமிழகத்தில் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்- தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் 51 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஈடுபட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்- தமிழக அரசு அதிரடி

திருச்சி எஸ்.பியாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அடையாறு துணை ஆணையராக வி.விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார். தீபா சத்யன் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பகலவன்- கரூர் மாவட்ட எஸ்பியாகவும், பாண்டியராஜன்- வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் ராஜேந்திரன், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாகவும், ஸ்டீபன் ஜேசுபாதம்- சிறப்பு பிரிவு எஸ்பியாகவும், அரவிந்த்- திருவண்ணாமலை எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிபி சக்ரவர்த்தி- சென்னை காவல்துறை நிர்வாக பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.