ரஜினி அழைத்திருக்கும் அந்த 50 பேர்!

 

ரஜினி அழைத்திருக்கும் அந்த 50 பேர்!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நாளை 30.11.2020 அன்று மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த ஆலோசனை மதியம் 2 மணிக்கு முடிவடைகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 50 நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ரஜினி அழைத்திருக்கும் அந்த 50 பேர்!

ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் 50 பேர் தான் வருகிறார்கள் என்றாலும் ஏராளமான ரஜினி ரசிகர்களும் ராகவேந்திரா மண்டபத்தின் முன்பாக குவிந்துவிடும் வாய்ப்பு இருக்கும் என்பதால், காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரைக்கும் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோடம்பாக்கம் காவல் அதிகாரிக்கு மன்றத்தின் மூத்த நிர்வாகி வி.என்.சுதாகர் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இது கொரோனா காலம் என்பதால், முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் அரசு விதித்துள்ள கொரோன நிபந்தனைகளின் அடிப்படையில்தான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்று காவல் அதிகாரிக்கு உறுதி அளித்துள்ளார்.

ரஜினி அழைத்திருக்கும் அந்த 50 பேர்!