நடிகர் விஷாலின் மனிதாபிமானம்: தினமும் 500 பேருக்கு உணவு

 

நடிகர் விஷாலின் மனிதாபிமானம்: தினமும் 500 பேருக்கு உணவு

கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தினை இழந்து கஷ்டப்படுவோருக்கு தனது ’தேவி அறக்கட்டளை’ மூலம் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார் நடிகர் விஷால்.

நடிகர் விஷாலின் மனிதாபிமானம்: தினமும் 500 பேருக்கு உணவு

கடந்த ஆண்டு ஊரடங்கின்போதே ஏழைகள், நலிந்த நடிகர்கள், சினிமா தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வந்தார் விஷால். தூய்மை பணியாளர்கள், சினிமா தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வந்தார்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே இருக்கும் இலங்கை தமிழர்கள் முகாம்களில் இருக்கும் 300 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார் விஷால். தான் தத்தெடுத்த தஞ்சாவூர் மாவட்டம், கார்கவயல் கிராம மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கினார்.

இந்நிலையில் தற்போது, சென்னையில் ஊரடங்கினால் உணவு இன்றி கஷ்டப்படும் சாலையோர மக்களுக்கு உணவு அளித்து வருகிறார் விஷால். சென்னையில் தினமும் 500 பேருக்கு உணவளிக்க அவர் ஏற்பாடு செய்திருக்கிறார்.