5000-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஊடுருவல் – ராணுவத் தலைமைத் தளபதி அதிர்ச்சி தகவல்

 

5000-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஊடுருவல் –  ராணுவத் தலைமைத் தளபதி அதிர்ச்சி தகவல்

பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் செயல்படத் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 5000க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் எந்த நேரத்திலும் ஊடுருவக் கூடும்

பாலாகோட்டில் உள்ள பயிற்சி முகாம்களில் பயங்கரவாகிகள் செயல்படத் தொடங்கியுள்ளதாக ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

பயிற்சி முகாம்கள் செயல்படத் தொடங்கிவிட்ட தகவல் வெளியான நிலையில், இந்தியத் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் ” இந்தியா பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தினமும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. காஷ்மீரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு யாரும் உதவி செய்ய முடியாத நிலையை இந்தியா உருவாக்கியுள்ளது. அங்கு தகவல் தொடர்பை ரத்து செய்துள்ளது. பிபின் ராவத்

பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் செயல்படத் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 5000க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் எந்த நேரத்திலும் ஊடுருவக் கூடும்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில் ” இது போன்ற பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தான் இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்பி முயற்சித்து வருகிறது. இதை எப்படி தடுப்பது என்று இந்தியாவுக்கு தெரியும். இதனால் பாகிஸ்தானுக்கு தான் பேரழிவு ஏற்படும்” என்று தெரிவித்தார்.

புல்வாமாவில் பாகிஸ்தான் நடத்திய தற்கொலை படைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்குமாறு இந்தியாவின் விமானப் படை பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் குண்டுகளை வீசி அங்குள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது குறிப்பிடத்தக்கது.