5000ஐ நெருங்குகிறது சென்னை கொரோனா பாதிப்பு.. மண்டலவாரி பட்டியல் வெளியீடு!
சென்னையில் மட்டும் நேற்று மட்டும் 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 4,882 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்துள்ளது. இந்த அளவிற்கு கொரோனா வைரஸ் தீவிரமாகிக் கொண்டே வந்து கொண்டிருப்பினும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை தமிழகத்தில் 61 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் நேற்று மட்டும் 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 4,882 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் மண்டலவாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்நிலையில், ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தமாக 4882 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.