‘500 கோடி முறைகேடு’ அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது வழக்கு பதியக்கோரி முன்னாள் திமுக எம்எல்ஏ அப்பாவு மனு!

 

‘500 கோடி முறைகேடு’ அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது வழக்கு பதியக்கோரி முன்னாள் திமுக எம்எல்ஏ  அப்பாவு  மனு!

உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் மீது வழக்கு பதிவு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

‘500 கோடி முறைகேடு’ அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது வழக்கு பதியக்கோரி முன்னாள் திமுக எம்எல்ஏ  அப்பாவு  மனு!

தமிழகம் முழுவதும் உள்ள 12, 524 கிராமங்களில் உள்ள 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெரு விளக்குகளை, எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்திற்காக 969.32 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் எல்.இ.டி. விளக்குகளை கொள்முதல் செய்ததன் மூலம் 500 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்பு துறை அதை தங்கள் மேலதிகாரிகளுக்கு அனுப்பி விட்டதாக கூறியுள்ளனர் .

‘500 கோடி முறைகேடு’ அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது வழக்கு பதியக்கோரி முன்னாள் திமுக எம்எல்ஏ  அப்பாவு  மனு!

இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக தனது புகாரை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது ஒப்புதலுடன் அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்என்று தெரிகிறது.