500 லிட்டர் போலி கிருமிநாசினி… தயாரித்தவர்களை அதிரடியாக கைது செய்த போலீசார்!

 

500 லிட்டர் போலி கிருமிநாசினி… தயாரித்தவர்களை அதிரடியாக கைது செய்த போலீசார்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும், இதற்கான முறையான மருந்து இன்னும் கண்டுபிடிக்க படாததால் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனா வைரஸ் நம் கைகளின் மூலமாக வாய், மூக்கு வழியாக உள்ளே செல்வதை தடுக்கும் பொருட்டு, கைகளை சானிடைசர்கள் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இதனால், நாடு முழுவதும் சானிடைசர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 

ttn

இந்நிலையில், தூத்துக்குடியில் போலி கிருமிநாசினி தயாரித்தவர்கள் கைது செய்யபட்டுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள முத்தம்மாள் காலனி என்னும் பகுதியில் போலியான கிருமிநாசினி விற்பனை செய்யபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார், போலி கிருமிநாசினிகளை தாயாரித்துக் கொண்டிருந்த ஞான கிஷோர்ராஜ், ஜான் பெனடிக்ட் என்னும் நபர்களை கைது செய்தனர். மேலும், அங்கிருந்த 500 லிட்டர் போலி கிருமி நாசினியையும் பறிமுதல் செய்தனர்.