500 ஆண்டுகள் பழமையன 5 பெருமாள் வாகனங்கள் பறிமுதல்: கைதாகிறாரா ரன்வீர் ஷா?

 

500 ஆண்டுகள் பழமையன 5 பெருமாள் வாகனங்கள் பறிமுதல்: கைதாகிறாரா ரன்வீர் ஷா?

தொழிலதிபர் ரன்வீர் ஷா அலுவலகத்தில் இருந்து 500 ஆண்டுகள் பழமையான 5 பெருமாள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: தொழிலதிபர் ரன்வீர் ஷா அலுவலகத்தில் இருந்து 500 ஆண்டுகள் பழமையான 5 பெருமாள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகே ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான அலுவலகத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையில் போலீசார் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே இது போல், நிறைய சிலைகள் ரன்வீர் ஷாவிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கூடுதலாக 5 பெருமாள் வாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரன்வீர் ஷாவை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரம் தெரிவித்துள்ளார்.