முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 75 சரவன் நகைகள், ரூ.50 லட்சம் கொள்ளை!

 

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 75 சரவன் நகைகள், ரூ.50 லட்சம் கொள்ளை!

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் ராணுவ வீரரின் வீட்டு பூட்டை உடைத்து 75 சரவன் நகைகள், ரூ. 50 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் உத்தமராஜா. முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று ஒட்டன்சத்திரம் அடுத்த தேவத்தூர் பகுதியில் தோட்டம் வாங்குவதற்காக மனைவியுடன் சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்தார்.

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 75 சரவன் நகைகள், ரூ.50 லட்சம் கொள்ளை!

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டில் இருந்த பீரோ மற்றும் லாக்கர் உடைக்கப்பட்டு அதனுள் வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 75 சவரன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து உத்தமாராஜா அளித்த தகவலின் பேரில் ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி அசோகன், தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திறகு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும்,இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.