விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து, 50 சவரன் நகைகள் கொள்ளை!

 

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து, 50 சவரன் நகைகள் கொள்ளை!

திருவண்ணாமலை

ஆரணி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். விவசாயி. இவர் கடந்த புதன்கிழமை அன்று பக்கத்து ஊரில் உள்ள விவசாய நிலத்திற்கு நெல் அறுவடை பணிக்காக குடும்பத்தினருடன் சென்றிந்தார். அறுவடை முடிந்து நேற்று கிராமத்திற்கு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து, 50 சவரன் நகைகள் கொள்ளை!

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து 50 சவரன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 15 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து குணசேகரன் அளித்த தகவலின் பேரில், கண்ணமங்கலம் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்த அவர்கள், கொள்ளை சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.