திருப்பத்தூர்: ஓபிசி மாணவர்களுக்கு 50%இட ஒதுக்கீடு வழங்க கோரி விசிக ஆர்ப்பாட்டம்

 

திருப்பத்தூர்: ஓபிசி மாணவர்களுக்கு 50%இட ஒதுக்கீடு வழங்க கோரி விசிக ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் ஓபிசி மாணவர்களுக்கு 50%இட ஒதுக்கீடு வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவ கல்லூரியில் ஓபிசி மாணவர்களுக்கு 50%இட ஒதுக்கீடு இந்த ஆண்டிலேயே வழங்க கோரி மத்தியில் ஆளும் பாஜக அரசை கேட்டு திருப்பத்தூரீல் அம்பேத்கர் சிலை முன்பு வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் இரா.சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருப்பத்தூர்: ஓபிசி மாணவர்களுக்கு 50%இட ஒதுக்கீடு வழங்க கோரி விசிக ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்பாட்டத்தில் திருப்பத்தூர் நகர செயலாளர் ஆனந்தன்,வேலூர் பாராளுமன்ற தொகுதி துணை செயலாளர் வழக்கறிஞர் முருகேசன்,முன்னனி பொறுப்பாளர் தி.ஜே.சசிகுமார்,முன்னாள் நகர துணை செயலாளர் விஜயகுமார்,மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அமைப்பாளர் கோகுல் அமர்நாத்,மாவட்ட பொறியாளர் துணை அமைப்பாளர் வெற்றிகொண்டான்,வழக்கறிஞர் தங்கபாண்டியன்,கந்திலி ஒன்றிய செயலாளர் ஏ.ஜே.சக்தி, திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் என்கிற பகலவன்,ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.