புதுக்கோட்டையில் 50 பேருக்கு கொரோனா : ஆட்சியர் உமா மகேஸ்வரி

 

புதுக்கோட்டையில் 50 பேருக்கு கொரோனா : ஆட்சியர் உமா மகேஸ்வரி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 1,685பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் 50 பேருக்கு கொரோனா : ஆட்சியர் உமா மகேஸ்வரி

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது.இந்த இக்கட்டான சூழலிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் என பலரும் போராடி வருகின்றனர்.

புதுக்கோட்டையில் 50 பேருக்கு கொரோனா : ஆட்சியர் உமா மகேஸ்வரி

இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று மட்டும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள அம்மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி , “புதுக்கோட்டையில் மொத்தம் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 26 பேர் குணமான நிலையில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் பலியாகியுள்ளார். தற்போது புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.