பழனி அருகே காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

 

பழனி அருகே காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

திண்டுக்கல்

பழனி அருகே காரில் கஞ்சாவை கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக இருவரை கைத செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த விருப்பாச்சி பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக, சத்திரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விருப்பாச்சி பாலம் அருகே வந்த காரை மறித்து சோதனையிட முயன்றனர்.

அப்போது, போலீசாரை கண்டு, காரில் வந்த 3 பேர் தப்பியோடிய நிலையில், 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, காரில் சுமார் 50 கிலோ அளவிலான கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றது தெரிய வந்தது.

பழனி அருகே காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

இதனையடுதது, பிடிபட்ட 2 நபர்களையும் சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் ஒட்டன்சத்திரம் அடுத்த தும்மிச்சம்பட்டியை சேர்ந்த சகோதரர்கள் பெருமாள் கார்த்தி, சரவணன் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.