தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் வங்கிக்கணக்கில் 50 கோடி ரூபாய் பணம்?

 

தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் வங்கிக்கணக்கில் 50 கோடி ரூபாய் பணம்?

பாலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகராக ஜொலித்து வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். மிகக் கவனமாகத் தேர்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்துவந்தார்.

கிரிக்கெட் வீரர் தோனியைத் திரையில் தத்ரூபமாகக் கொண்டு வந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். சில காட்சிகளில் தோனியே நடித்திருக்கிறாரா என்று எண்ண வைத்த நடிப்புக்குச் சொந்தக்காரர். தோனியின் கிரிக்கெட் ரசிகர்கள், சுஷாந்தின் சினிமா ரசிகர்களாக ஆகினர். மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வந்த இவர், ஜூன் 14-ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் வங்கிக்கணக்கில் 50 கோடி ரூபாய் பணம்?

சில நாள்கள் முன் வெளிவந்த தகவல் ஒன்றில், சுஷாந்த் தற்கொலை செய்வதற்கு முன் தன் பெயரை கூகுளில் தேடியிருக்கிறார்  என்பதே அது.

தற்போது பீகார் போலீஸ் அளித்திருக்கும் ஒரு தகவலில், சுஷாந்த் வங்கிக்கணக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக 50 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய தொகை வங்கியில் செலுத்தப்பட்டிருப்பது குறித்து ஆச்சர்யம் அடைந்துள்ளனர் காவல் துறையினர்.

தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் வங்கிக்கணக்கில் 50 கோடி ரூபாய் பணம்?

வங்கியில் செலுத்தப்பட்ட 50 கோடி ரூபாயும் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பவும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டுமே சுஷாந்தின் வங்கிக் கணக்கில் 17 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. அதில் 15 கோடி ரூபாய் எடுக்கவும் பட்டிருக்கிறது.

சுஷாந்த் வழக்கில் இந்த விஷயம் முக்கிய திருப்புமுனையை அளிக்கும் எனக் கருதுகிறார்கள்