50 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு… டிச 29ல் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்!

 

50 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு… டிச 29ல் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்!

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோட்சா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஜார்கண்ட் முக்தி மோட்சா 30 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 1 இடத்திலும் வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து தனக்கு 50 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு உள்ளதாகவும் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஹேமந்த் சோரன் ஆளுநருக்கு கடிதம் அளித்தார். 

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன் வருகிற 29ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்கும்படி சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

Sonia gandhi

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோட்சா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஜார்கண்ட் முக்தி மோட்சா 30 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 1 இடத்திலும் வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து தனக்கு 50 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு உள்ளதாகவும் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஹேமந்த் சோரன் ஆளுநருக்கு கடிதம் அளித்தார். 
இதைத் தொடர்ந்து வருகிற 29ம் தேதி நடைபெறும் விழாவில் ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை ஹேமந்த் சோரன் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
மேலும் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.