3 மாத பிரிவு! தாயை சந்திக்க விமானத்தில் தனியாக பயணித்துவந்த 5 வயது சிறுவன்

 

3 மாத பிரிவு! தாயை சந்திக்க விமானத்தில் தனியாக பயணித்துவந்த 5 வயது சிறுவன்

பொதுமுடக்கத்தால் 3 மாதங்களாக தாயை பிரிந்திருந்த 5 வயது சிறுவன் டெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் தனியாக பயணித்துவந்து தாயை சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலுள்ள தாத்தாவின் வீட்டிற்கு 3 மாதங்களுக்கு முன் சென்ற 5 வயது சிறுவன் விஹான் ஷர்மா, பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டதால் பெங்களூரு திரும்ப முடியாமல் அங்கேயே இருந்துள்ளான். இதனால் ஏறத்தாழ 2 மாதமாக தாயை சந்திக்காமல் இருந்துள்ளான். தற்போது உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால் டெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் பயணிக்க சிறப்பு அனுமதி பெற்றுள்ளான். பத்திரமாக பெங்களூரு வந்திறங்கிய சிறுவனுக்காக தாய் விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார்.

3 மாத பிரிவு! தாயை சந்திக்க விமானத்தில் தனியாக பயணித்துவந்த 5 வயது சிறுவன்

கையில் கிளவுஸ், முகக்கவசம், பயண பாஸ், சிறப்பு வசதி அதனுடன் கையில் செல்போனுடன் பெங்களூரு வந்து இறங்கிய சிறுவன் விஹானின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.