அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் கொட்டி 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

 

அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் கொட்டி 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

கடந்த சில காலமாக இந்தியாவில் பெற்றோர்களின் அலட்சியத்தால் குழந்தைகள் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் 5 வயது சிறுவன் கொதிக்கும் சாம்பார் கொட்டியதால் உயிரிழந்துள்ளார்.

அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் கொட்டி 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹையாத்நகரில் இன்று புதுமனை புகுவிழா நடந்துள்ளது. அந்த விழாவில் கலந்து கொள்ள வெங்குலு என்பவர், அவரது குடும்பத்தினருடன் வந்துள்ளார். விழா முடிந்ததும் வீடு திரும்பிய வெங்குலுவுடன், அவரது உறவினர்கள் சிலரும் சென்றுள்ளனர். அதனால் அவர்களுக்கு பரிமார வெங்குலுவின் மனைவி அவசர அவசரமாக சமைத்துக் கொண்டிருந்துள்ளார். அச்சமயம் அங்கே விளையாடிக் கொண்டிருந்த அவர்களது 5 வயது மகன், விளையாட்டாக அடுப்பில் இருந்த சாம்பாரை இழுத்துள்ளார்.

இதனால் அவர் மீது கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் கொட்டியுள்ளது. இதனையடுத்து சிறுவனை அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும், அந்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.