5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… தந்தை போக்சோ சட்டத்தில் கைது!

 

5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… தந்தை போக்சோ சட்டத்தில் கைது!

விருதுநகர்

சாத்தூரில் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவரது மகள் சின்னப்பர் தேவி. இவரது கணவர் குமாரன். கூலி தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர். இதனிடையே குடும்ப தகராறு காரணமாக சின்னப்பர் தேவி, குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… தந்தை போக்சோ சட்டத்தில் கைது!

இதனிடையே பாட்டி வீட்டில் உள்ள குழந்தைகளை, தந்தை குமாரன் அடிக்கடி வெளியே அழைத்துச் சென்று விட்டு மீண்டும் வீட்டில் விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்து உள்ளார். இதேபோல், நேற்று முன்தினம் காலை குழந்தைகளை சாத்தூரில் உள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்ற குமாரன், மாலை வீட்டில் விட்டுள்ளார். அப்போது, சிறுமி அழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாயார் சின்னப்பர்தேவி விசாரித்தபோது, சிறுமிக்கு தந்தை குமாரன் பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், குமாரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், அவரை கைதுசெய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.