5 வயது குழந்தையை வீட்டு வேலைக்கு அமர்த்தி சித்ரவதை ! குழந்தைக்கு சூடு வைத்த மாற்றுத் திறனாளி பெண் கைது !

 

5 வயது குழந்தையை வீட்டு வேலைக்கு அமர்த்தி சித்ரவதை ! குழந்தைக்கு சூடு வைத்த மாற்றுத் திறனாளி பெண் கைது !

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 5 வயது குழந்தையை வீட்டு வேலைக்கு பணி அமர்த்திய மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் குழந்தையை சித்ரவதை செய்து சூடு வைத்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஜூன் 12ம் தேதி ஐதராபாத்தில் ஒரு மாற்றுத் திறனாளி பெண் வீட்டில் கொத்தடிமையாக பணியமர்த்தப்பட்ட 5 வயது குழந்தையை போலீசார் மீட்டனர். மைனர் சிறுமி தனது முதலாளியால் உடல் ரீதியாக தாக்கப்பட்டதாகவும், தீக்காயங்கள் மற்றும் அவரது உடலில் சில தையல் அடையாளங்கள் இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குழந்தைத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த அந்த சிறுமி, சேமர்காட் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள வாகேத் நகர் பகுதியில் சீமா என்ற மாற்றுத் திறனாளி இல்லத்தில் பணிபுரிந்தார்.

5 வயது குழந்தையை வீட்டு வேலைக்கு அமர்த்தி சித்ரவதை ! குழந்தைக்கு சூடு வைத்த மாற்றுத் திறனாளி பெண் கைது !

இந்த சம்பவத்தை குறித்து சதர்காட் காவல் நிலைய ஆய்வாளர் பாலிஷெட்டி சதீஷ் கூறும்போது வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணியளவில் 5 வயது சிறுமியை குழந்தை தொழிலாளியாகப் பயன்படுத்துவதாகவும், உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் எங்களுக்கு புகார் வந்தது. அந்த குழந்தையை சீமா என்பவர் துன்புறுத்தியதாகவும் தகவல் வந்தது.

“நாங்கள் உடனடியாக அவரது இல்லத்தில் சோதனை நடத்தி குழந்தையை மீட்டு குழந்தை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

அந்தப் பெண் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.