டிராக்டர் கவிழ்ந்து விழுந்து கோர விபத்து: 5 பெண்கள் பரிதாப மரணம்!

 

டிராக்டர் கவிழ்ந்து விழுந்து கோர விபத்து: 5 பெண்கள் பரிதாப மரணம்!

கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மஞ்சுகொண்டப்பள்ளி அருகே, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பலர் டிராக்டரில் கோவிலுக்கு சென்றுள்ளனர். கர்நாடகத்தின் கனகபுரம் பகுதியில் இருந்து தப்பகுலி பகுதியில் இருக்கும் கோவிலுக்கு அவர்கள் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், ஓசூருக்கு 80 கி.மீ தொலைவில் இருக்கும் வனப்பகுதியில் டிராக்டர் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் கவிழ்ந்துள்ளது.

டிராக்டர் கவிழ்ந்து விழுந்து கோர விபத்து: 5 பெண்கள் பரிதாப மரணம்!

இந்த விபத்தில் டிராக்டருக்கு அடியில் சிக்கிய 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் பயணித்த 10க்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. தகவல் அறிந்து சென்ற போலீசார், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததாகவும் அடர்ந்த வனப்பகுதியில் இந்த விபத்து நேர்ந்ததால் மீட்புப் பணியில் சிக்கல் நீட்டிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.