சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 5 பெண்கள் பரிதாப மரணம்!

 

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 5 பெண்கள் பரிதாப மரணம்!

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே சரக்கு வாகனத்தில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் சென்று கொண்டிருந்தனர். விவசாய பணிக்காக அவர்கள் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், அவர்கள் சென்ற வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், படுகாயம் அடைந்த 5 பெண்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஓட்டுநர் பலத்த அடியுடன் உயிர் தப்பியதாக தெரிகிறது.

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 5 பெண்கள் பரிதாப மரணம்!

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது. வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 விவசாய பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.