மேட்ரிமோனியில் வரன் தேடும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

 

மேட்ரிமோனியில் வரன் தேடும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

கடுகு முதல் மொபைல் வரை எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங் என்றாகி விட்டது. அதிலும் கொரோனா நோய்த் தொற்று தொடங்கியதும், ஆன்லைன் வர்த்தகம் முன்பை விட அதிகளவில் நடைபெறுவதாகச் சொல்கிறார்கள்.

திருமணத்திற்கு பெண் அல்லது மாப்பிள்ளை பார்ப்பதற்கு மேட்ரிமோனியில் பதிவு செய்வது கடந்த பத்தாண்டுகளாக அதிகரித்தே வருகிறது. அதிலும் தயங்கிக்கொண்டிருந்தவர்களை இந்தப் பேரிடர் காலம் ஆன்லைனுக்குள் நுழைய வைத்துவிட்டது.
மேட்ரிமோனியில் வரன் தேடும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

மேட்ரிமோனியில் வரன் தேடுவது என்பது தவறல்ல. நேரில் ஒருவரிடம் சொல்லி வரன் தேடும்போது எந்தந்த விஷயங்களில் கவனமாக இருப்பீர்களோ… அதை விட இன்னும் சில விஷயங்களில் கவனம் தேவை. அவ்வளவுதான்.

பொதுவாக மேட்ரிமோனியில் வரன் தேடுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் முதன்மையான 5 விஷயங்களைப் பார்ப்போம்.

  1. தரமான தளம்: நிறைய மேட்ரிமோனி இணையதளங்கள் வந்துவிட்டன. அவற்றில் சரியான தகவல்களை அளிக்கும் தளத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதற்கு உங்கள் உறவுகளில் யாரேனும் மேட்ரிமோனியலில் வரன் பார்த்து திருமணம் செய்திருந்தால் அவர்களின் உதவியை நாடலாம்.

    சில மேட்ரிமோனி தளங்களில் பல தகவல்களைக் கேட்கவே மாட்டார்கள். ஓரிரு தகவல்களுக்குப் பிறகு பணம் கட்ட வைப்பதிலேயே குறியாக இருப்பார்கள். அம்மாதிரியான தளங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

  2. தகவல் செக்: உங்களிடம் நிறைய தகவல்களை ஒரு தளம் கேட்டால், அதேபோல பெண் / பையன் வீட்டிலேயும் கேட்டிருப்பார்கள். அதனால் கூடுதல் விவரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். அதனால், அந்தத் தளங்களில் நீங்கள் தேடும் வரன் குறித்த முழு தகவல்களையும் செக் பண்ணுங்கள்.
    மேட்ரிமோனியில் வரன் தேடும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்
  3. போன் நம்பர்: வரன் பதிவு செய்யும்போது போன் அல்லது மொபைல் நம்பர் கேட்பார்கள். அதில் இரண்டு விஷயங்களில் தெளிவாக இருங்கள். ஒன்று, நீங்கள் தரும் எண்ணை வைத்திருப்பவர், எப்போது யார் அழைத்தாலும் உடனே எடுத்து பேசுபவராக இருக்க வேண்டும். ரொம்ப பிஸியாக இருப்பவர் எண்ணைக் கொடுக்க வேண்டாம். இரண்டாவது, மணமகன் தேடுகிறீர்கள் எனில், உங்கள் பெண்ணின் எண்ணைக் கொடுப்பது குறித்து அப்பெண்ணுடன் ஆலோசித்துக் கொடுங்கள்.
  4. நிராகரியுங்கள்: சிலர் எதிர்பார்ப்பு என மறைமுகமாக வரதட்சணையைக் குறிப்பிட்டிருப்பார்கள். அதுபோன்ற விண்ணப்பங்களை நிராகரியுங்கள். சிலர் சாதியின் உட்பிரிவிலும் நுட்பமாக வேண்டும் எனக் கேட்பார்கள். அதுதேவைதானா என்பதை ஆலோசித்து முடிவெடுங்கள். ஏனெனில், இவை உங்களின் விருப்பம்தான் என்றாலும் சில நெகிழ்வுகள் இருப்பதுதானே உறவுகள். ரொம்பவும் கெடுபிடியான நபர்களின் உறவுகள் சீக்கிரம் உடைந்துவிடும்.

    மேட்ரிமோனியில் வரன் தேடும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

  5. டபுள் செக்: என்னதான் ஆன்லைனின் விவரங்களைச் செக் பண்ணினாலும் நேரில் பார்ப்பது, பேசுவது போல ஆகாது. அதனால், நீங்கள் தேர்தெடுத்த பையன் அல்லது பெண் தொடர்பான நபர்களை நேரில் சென்று விசாரிக்க தயக்கம் காட்டாதீர்கள். குறிப்பாக, வேலை செய்யும் இடம், தற்போது வேலையில் இருக்கிறாரா… போன்ற தகவல்கள்.

அதை பெண் பார்ப்பது என்பதாக முடிவெடுத்து செல்லாதீர்கள். பொதுவாக விசாரிப்பது என்பதாகவே இருக்கட்டும். ஏனெனில் மேட்ரிமோனி மூலம் பல வரன்கள் வரும். ஒவ்வொருன்றுக்கும் பெண் பார்க்கச் செல்லும் நடைமுறை சரிவராது.

பெண் / பையன் பார்ப்பது என்பது திருமணம் என்ற ஒன்றோடு முடிந்துவிடப் போவதில்லை. அதன்பிறகும் தொடர்ந்து வரும் பந்தம். அதனால், நிதானமாக, பொறுமையாக, அவசரம் காட்டாமல் வரன்களைத் தேர்தெடுங்கள்.