தஞ்சையில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 5 கடைகளுக்கு சீல் வைப்பு!

 

தஞ்சையில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 5 கடைகளுக்கு சீல் வைப்பு!

தஞ்சை

தஞ்சையில் கொரோனா ஊரடங்கை மீறி செயல்பட்ட பேக்கரி உள்ளிட்ட 5 கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டி சீல்வைத்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை பரவல் தீவிரமடைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 700-ஐ, நெருங்கியுள்ள நிலையில், உயிரிழப்பும் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கை ஒட்டி பகல் 12 மணிக்கு மேல் நகரில் அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில், சாலைகளில் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சுற்றித்திரிந்தனர்.

தஞ்சையில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 5 கடைகளுக்கு சீல் வைப்பு!

இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர். இதேபோல், தஞ்சை நகரில் உள்ள முக்கிய வீதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அரசின் விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்ததுடன், கடைகளை மூடி சீல் வைத்தனர்.

அதன்படி, தடையை மீறி திறக்கப்பட்ட 2 மின்சாதன பொருட்கள் கடைகள், குறிப்பிட்ட நேரத்திற்கும் மேலாக திறந்திருந்த 2 பேக்கரிகள் மற்றும் ஒரு டீக்கடைக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள், அந்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.