தமிழகத்தில் 5 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு!
Sep 18, 2020, 09:53 IST1600402988000
தமிழகத்தில் 5 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவதாக தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக உள்ள 5 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். கணேசன், சங்கீதா, கிறிஸ்துராஜ் ,பிருந்தாதேவி, அருணா ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றனர்.
மத்திய அரசின் ஒப்புதலையடுத்து 5 பேரையும் நியமித்து தலைமைச் செயலாளர் சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார்.