“பகலில் தொடுவாங்க ,ராத்திரியில் கெடுப்பாங்க ” -லாக்கப்பில் சிக்கிய பெண்ணை நாசம் செய்த ஐந்து போலீஸ்.

 

“பகலில் தொடுவாங்க ,ராத்திரியில் கெடுப்பாங்க ” -லாக்கப்பில் சிக்கிய பெண்ணை நாசம் செய்த ஐந்து போலீஸ்.

ஒரு கொலை வழக்கில் சிக்கிய 20 வயது பெண்ணை சிறைக்காவலர்கள் ஐந்து பேர் சேர்ந்து பத்து நாட்கள் பலாத்காரம் செய்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .

“பகலில் தொடுவாங்க ,ராத்திரியில் கெடுப்பாங்க ” -லாக்கப்பில் சிக்கிய பெண்ணை நாசம் செய்த ஐந்து போலீஸ்.

மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் ஒரு 20 வயது பெண் ஒரு கொலை வழக்கில் அங்குள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார் .இது கடந்த மே மாதம் நடந்தது .அப்போது அந்த சிறைச்சாலையில் இருந்த ஐந்து போலீஸ் காரர்கள் அந்த பெண்ணை பத்து நாட்களாக இரவும் பகலும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளார்கள் .
இந்த விஷயத்தினை அந்த பெண் அந்த சிறை வார்டனிடம் கூறியுள்ளார் .ஆனால் அவர் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .இப்போது அந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .இதனால் அந்த பலாத்கார வழக்கு பற்றி விசாரணை குழுவிற்கு விசாரணைக்கு வந்தது .அப்போது நீதிபதிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள் .அப்போது அந்த பெண் தான் ஒரு கொலை வழக்கில் சிறையிலிருந்த போது அங்கு காவலுக்கு இருந்த ஐந்து போலீஸ் இரவு பகல் பாராமல் பத்து நாட்கள் தன்னை பலாத்காரம் செய்ததகவும் ,அப்போது அவர்கள் பலாத்காரத்துக்கு மறுத்தாலோ இல்லை எவரிடமாவது சொன்னாலோ தன்னுடைய தந்தையையும் கொலை வழக்கில் சிக்க வைத்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறினார் .விசாரணையின் போது சிறை வார்டனும் தன்னிடம் அந்த பெண் அப்போதே இந்த பலாத்கார விஷயத்தை தெரிவித்ததாக கூறினார் .இதனால் அந்த வழக்கில் மேற்கொண்டு நீதி விசாரணை நடந்து வருகிறது .

“பகலில் தொடுவாங்க ,ராத்திரியில் கெடுப்பாங்க ” -லாக்கப்பில் சிக்கிய பெண்ணை நாசம் செய்த ஐந்து போலீஸ்.