லண்டனில் இருந்து கரூர் வந்த 5 பேருக்கு கொரோனா இல்லை!

 

லண்டனில் இருந்து கரூர் வந்த 5 பேருக்கு கொரோனா இல்லை!

லண்டனில் இருந்து கரூர் வந்த 5 பேருக்கும் கொரோனா இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

லண்டனில் இருந்து கரூர் வந்த 5 பேருக்கு கொரோனா இல்லை!

பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி பிரிட்டனில் புதிதாக 30,501 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 316 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த பாதிப்பு 22.88 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையும் 70,752 ஆக அதிகரித்துள்ளது.

லண்டனில் இருந்து கரூர் வந்த 5 பேருக்கு கொரோனா இல்லை!

இதை தொடர்ந்து பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் இதுவரை 13 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று அறிவித்தார்.

லண்டனில் இருந்து கரூர் வந்த 5 பேருக்கு கொரோனா இல்லை!

இந்நிலையில் லண்டனில் இருந்து கரூர் வந்த 5 பேர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் 20 பேருக்கும் கொரோனா இல்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பெயரில் 20 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.