ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை : அதிர வைக்கும் காரணம்!

 

ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை : அதிர வைக்கும் காரணம்!

கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை : அதிர வைக்கும் காரணம்!

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கடன் பிரச்சனையால் குடும்பத்துடன் நகை பட்டறை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். ஆர்.கே.கருப்பதேவர் தெருவில் குடும்பத்தினர் நான்கு பேருடன் உரிமையாளர் சரவணன் தற்கொலை செய்து கொண்டார்.பிள்ளைகள் மகாலட்சுமி (10) அபிராமி ( 5) அமுதன் (5) ஆகியோருக்கு விஷம் தந்து விட்டு கொலை செய்து, பின்னர் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். சரவணன், மனைவி ஸ்ரீநிதி பூங்கோதை உட்பட 5 பேரின் சடலத்தை கைப்பற்றி உசிலம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை : அதிர வைக்கும் காரணம்!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினர் தொழிலில் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கொரோனா முதல் அலையின் போது மக்கள் வேலைகளை இழந்ததுடன், பொருளாதார நிலைமையில் கடும் நெருக்கடியை சந்தித்தனர். இதனால் பலரும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறின. இந்த சூழலில் மதுரையில் 5 பேர் ஒரே குடும்பத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.