சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.எஸ்.ஐ பால்துரை உட்பட மேலும் 5 காவலர்கள் கைது!

 

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.எஸ்.ஐ பால்துரை உட்பட மேலும் 5 காவலர்கள் கைது!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.எஸ்.ஐ பால்துரை உட்பட மேலும் 5 காவலர்கள் கைது!

இதனையடுத்து இந்த இரட்டை கொலை வழக்கு வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதன் பேரில், சம்பந்தப்பட்ட சிறையில் அவர்களுக்குப் பாதுகாப்பு பிரச்சனை எழும் என்பதால் சிறைத்துறை நிர்வாகம் அவர்களை மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றம் செய்தது. அதனைத்தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.எஸ்.ஐ பால்துரை உட்பட மேலும் 5 காவலர்கள் கைது!

நேற்று தமிழக அரசு கோரிக்கை விடுத்ததின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளித்தது. மேலும், சிபிஐ விசாரணையை கையில் எடுக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குள காவல்நிலையத்தில் பணியிலிருந்த எஸ்எஸ்ஐ பால்துரை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.