பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு !

 

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு !

விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியில் உள்ள ராஜலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது . இங்கு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் அங்கு புகைமூட்டம் சூழ்ந்தது. இதையடுத்து விருதுநகர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு !

இந்நிலையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். வழக்கம்போல ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள். படுகாயம் அடைந்த 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் 100ற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வரும் இந்த ஆலையில் உயிரிழந்தவர்களின் முழுவிவரம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு !

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு தொழிற்சாலைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் பல இடங்களில் வெடிவிபத்து சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இன்று நள்ளிரவு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாமல்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது . ரிஸ்வான் பாஷா என்பவரின் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சேதமாகின.