சிறுத்தையை கொன்று சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது!

 

சிறுத்தையை கொன்று சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது!

கேரளாவில் சிறுத்தை கொன்று சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தையை கொன்று சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முனியாரா பகுதியில் சிறுத்தை ஒன்றை சிலர் வேட்டையாடியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த வீட்டிலிருந்து 10 கிலோ கறி, சிறுத்தை தோல், பற்களை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் வினோத் , குரியகோஸ்,சி.எஸ். பினு, சாலி குஞ்சப்பன்,மற்றும் வின்சென்ட் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து நடத்திய விசாரணையில், சிறுத்தையை பொறிவைத்து லாவகமாக பிடித்து அதை கொன்று, சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.

சிறுத்தையை கொன்று சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது!

அழிந்து வரும் விலங்கான சிறுத்தை இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட விலங்காக உள்ளது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 ன்படி இதை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். இதனால் கைதானவர்களுக்கு சுமார் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.