சென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து மாற்றம் : விவரம் இதோ!

 

சென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து  மாற்றம் : விவரம் இதோ!

சென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து  மாற்றம் : விவரம் இதோ!

பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை தமிழகம் வருகிறார். நாளை காலை 10.30 மணிக்கு சென்னை வரும் அவர், ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, சென்னை, வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் , இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் போன்றவற்றை தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் நாளை 5 மணிநேரம் போக்குவரத்து  மாற்றம் : விவரம் இதோ!

இந்நிலையில் சென்னையில் மாநகர பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் 5 மணிநேரம் திருப்பி விடப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக அண்ணாசாலை செல்லலாம். ராயபுரத்தில் இருந்து பாரிமுனை செல்லும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு வழியாக செல்லலாம். அண்ணாசாலையிலிருந்து ராயபுரம் செல்ல ஸ்பென்சர் பென்னி சாலை, நாயர் பாலம் வழியாக செல்லலாம். சவுத்கெனால்ரோடு – காந்திசிலை செல்ல கச்சேரி சாலை, லஸ், ராயப்பேட்டை சாலை வழியாக செல்லலாம்” என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.