தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று கோயமுத்தூர், நீலகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி , திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். வருகின்ற 28ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி , திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

இன்று முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை மன்னார் வளைகுடாப் பகுதி, வடக்கு கிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல் ,அந்தமான் கடல் பகுதி, வட மேற்கு வங்க கடல் பகுதி, தென்மேற்கு வடக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதி உள்ளிட்ட இடங்களில் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.