‘வருகிறது புயல்’ தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

 

‘வருகிறது புயல்’ தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் அரபிக்கடலில் 14ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘வருகிறது புயல்’ தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி ,கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் தமிழக மாவட்டங்கள் , டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும், நீலகிரி ,கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

‘வருகிறது புயல்’ தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

வருகின்ற 14ம் தேதி நீலகிரி ,கோவை, தென் தமிழக மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள இடங்களில் இடி மின்னலுடன் காற்று வீசக்கூடும் என்றும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 15ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், மற்றும் காரைக்கால், புதுவை பகுதிகளில் ஒரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் ,ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வருகிறது புயல்’ தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

16ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . ஏனெனில் சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.