தங்கம் கடத்தலுக்கு உடந்தை: திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய 5 புரோக்கர்கள்!

 

தங்கம் கடத்தலுக்கு உடந்தை: திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய 5 புரோக்கர்கள்!

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வருவதற்கு இடைத்தரகராக செயல்பட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீப காலமாக திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பின்னணியில் ஏதேனும் நபர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. விமானத்தின் மூலம் திருச்சி வருபவர்கள் தங்களது கரன்சிகளை மாற்றிக் கொள்ள விமான நிலையத்தில் மணி எக்ஸ்சேஞ்ச் அலுவலகம் இருக்கிறது. அந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் தான் தங்கக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

தங்கம் கடத்தலுக்கு உடந்தை: திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய 5 புரோக்கர்கள்!

இது தொடர்பாக புகார் எழுந்ததையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஏர்போர்ட்டில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில், 5 புரோக்கர்கள் சிக்கினர். அவர்களை கூண்டோடு கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணையை தொடருகின்றனர். அதிகாரிகளின் உதவி இல்லாமல் புரோக்கர்கள் இதை செய்வது எளிதல்ல. ஆகையால் புரோக்கர்களுக்கு உதவி புரிந்த அதிகாரிகள் குறித்து விசாரணை தீவிரபடுத்தப்பட்டுள்ளது.