5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

 

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார்  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். 

ttn

இந்நிலையில் இந்த வழக்கானது  தேனி நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. இதில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் நாகராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி கீதா தீர்ப்பளித்துள்ளார். இதனையடுத்து குற்றவாளி நகராஜூவை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.