5-வது டெஸ்ட்: அலஸ்டைர் குக், ஜோ ரூட் சதம் – இந்தியாவிற்கு 464 ரன்கள் இலக்கு நிர்ணயம்

 

5-வது டெஸ்ட்: அலஸ்டைர் குக், ஜோ ரூட் சதம் – இந்தியாவிற்கு 464 ரன்கள் இலக்கு நிர்ணயம்

லண்டன்: 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 464 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான 5-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 331 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்ஸில் 292 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து 2-வது இன்னிங்கை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டைர் குக் 46 ரன்னுடனும்ஜோ ரூட் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

 

இந்நிலையில், இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. அலஸ்டைர் குக் தனது கடைசி இன்னிங்சில் சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட்டும் சதம் அடித்தார். இறுதியாக ஜோ ரூட் 125 ரன்னிலும்அலஸ்டைர் குக் 147ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 259ரன்கள் குவித்தது.

அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 18 ரன்னிலும்பென் ஸ்டோக்ஸ் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கும்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழந்த நிலையில் 437 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இருந்தாலும் இங்கிலாந்து டிக்ளேர் செய்யவில்லை.

இறுதியாக 112.3 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 463 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவிற்கு 464 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.