5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவு இல்லை: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி

 

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவு இல்லை: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு  பின்னடைவு இல்லை என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

சென்னை: 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு  பின்னடைவு இல்லை என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இந்த தேர்தல்களில் பாஜக எதிர்பாராத சரிவை சந்தித்துள்ளது. இதனால் அக்கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. யாருக்கும் பின்னடைவு இல்லை.இது மோடி, ராகுலுக்கு இடையே இருக்கும் போட்டி அல்ல. முற்றிலும் மக்களுடைய விருப்பம். ஜனநாயகத்தின் வெளிப்பாடு என்றார்.