5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்த்து பா.ம.க தொடர் முழக்கப் போராட்டம் ரத்து!

 

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்த்து பா.ம.க தொடர் முழக்கப் போராட்டம் ரத்து!

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அவர்களது பள்ளிகளிலேயே நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது

கட்டாய தேர்ச்சி முறை சட்டத்திருத்தத்தின் படி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.அதன் படி, இந்த கல்வியாண்டு இறுதியில் 8 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதனையடுத்து, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அவர்களது பள்ளிகளிலேயே நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால், இந்த மாணவர்களுக்குத் தேர்வு நடத்த வேண்டாம் என்று பல தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல, இதனை எதிர்த்து பா.ம.க சார்பில்  நாளை போராட்டம் நடத்தப்படும்  என்று  அறிவிக்கப்பட்டிருந்தது. 

ttnn

இந்நிலையில், அந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக பா.ம.க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ” ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவியரின் கல்வியைக் கடுமையாகப் பாதிக்கும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாளை செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் மாவட்ட மற்றும் வட்ட தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மருத்துவர் அய்யா அவர்களை இன்று காலை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 

ttn

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தேர்வின் முடிவில் அடிப்படையில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி நிறுத்திவைக்க வேண்டாமென்று அரசு ஆணை இருப்பதாகவும் இது குறித்து அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் மருத்துவர் அய்யா அவர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.  அதை ஏற்று நாளை பாமக நடத்தவிருக்கும் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.  அதைக்கேட்ட மருத்துவர் அய்யா அவர்கள் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டும்தான் இந்த சிக்கலுக்குத் தீர்வாக இருக்கும் என்றும் கை விடும் படியும் கேட்டுக்கொண்டார். 

ttn

அதை ஏற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு முதல் கைவிடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று மருத்துவர் அய்யா அவரிடம் உறுதியளித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இந்த வாக்குறுதியை ஏற்று நாளை நடைபெறுவதாக இருந்த தொடர் முழக்கப் போராட்டம் கைவிடப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.