5 பெண்களை கொடூரமாக கொலை செய்த சீரியல் கில்லர்…ரிலீஸ் ஆன 6 மாதத்தில் மீண்டும் இன்னொரு கொலை!

 

5 பெண்களை கொடூரமாக கொலை செய்த சீரியல் கில்லர்…ரிலீஸ் ஆன 6 மாதத்தில் மீண்டும் இன்னொரு கொலை!

பல ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வந்த நிலையில் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

நன்னடத்தை காரணமாகச் சிறையிலிருந்து வெளியே வந்த   சீரியல் கில்லர் ஒருவரை மீண்டும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

ttn

தாய்லாந்தில் சோன்கித் பும்பாங் (Somkid Pumpuang) என்ற 55 வயதான ஒருவர் கடந்த 2005 ஆம் ஆண்டு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 5 பெண்களை ஒரே மாதிரி கொடூரமாக கொலை செய்தார். இதனால் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பல ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வந்த நிலையில் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு அதிக சிறை கைதிகளை அடைத்து வைக்க போதுமான வசதி இல்லாததும்  ஒரு காரணம். 

ttn

இந்நிலையில் சோன்கித் பும்பாங் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விடுதலையானார். ஆனால், ரிலீஸான சில மாதங்களிலேயே அவர் 51 வயதான ஹோட்டல் பணியாளர் ஒருவரை தனது பாணியில் மீண்டும் கொலை செய்துள்ளார். இதனால் போலீசார் மீண்டும் சீரியல் கில்லர் சோன்கித் பும்பாங்கை  தீவிரமாக தேடி வருகின்றனர்.