5 கோடியில் வீடு வாங்கி தந்த பவர் ஸ்டார்? முன்னாள் மனைவி ஆவேசம்!
அதில் உண்மைத்தன்மை உள்ளதா இல்லையா என்பதை கூட சிலர் ஆராய்ந்து பார்க்க மறந்துவிடுகிறார்கள்.
திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் திருமணம், விவகாரத்து போன்ற விவகாரங்கள் உடனே செய்திகளாக பரவிவிடும். அதில் உண்மைத்தன்மை உள்ளதா இல்லையா என்பதை கூட சிலர் ஆராய்ந்து பார்க்க மறந்துவிடுகிறார்கள்.
அந்த வகையில் தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் பவன் கல்யாண். சினிமாவிலிருந்து அரசியல், மீண்டும் சினிமா என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் 5 கோடி ரூபாய்க்கு புதிய வீடு வாங்கி தனது முன்னாள் மனைவி ரேணு தேசாய் மற்றும் குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியது.
இந்நிலையில் இதுகுறித்து பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய், ‘இந்த வீடு நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கியது. என் முன்னாள் கணவர் இதுவரை எந்தவித ஜீவனாம்சமும் எங்களுக்கு கொடுக்கவில்லை. மீடியா தயவுசெய்து கொஞ்சம் பொறுப்புடன் செய்தி பகிருங்கள்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.