5 கேமராக்கள் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் புகைப்படம் லீக் ஆனது – புகைப்படம் உள்ளே

 

5 கேமராக்கள் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் புகைப்படம் லீக் ஆனது – புகைப்படம் உள்ளே

மும்பை: ஐந்து கேமரா செட்டப் கொண்ட புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

நீண்ட நாட்களாகவே 5 கேமரா செட்டப் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் அவ்வப்போது லீக் ஆகி வந்தது. இந்நிலையில், அந்த நோக்கியா ஸ்மார்ட்போனின் புகைப்படம் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ஃபாக்ஸ்கான் இந்த ஸ்மார்ட்போனினை வடிவமைத்து உற்பத்தி செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் புகைப்படம் சீனாவில் லீக் ஆகி இருக்கிறது. புதிய ப்ரோடோடைப் புகைப்படத்தில் TA-1094 என்ற மாடல் நம்பர் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 9 என்ற பெயரில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்புறம் ஐந்து கேமரா லென்ஸ் 1-1-3 என்ற அடிப்படையில் பொருத்தப்பட்டு அதன் ஒன்றில் எல்.இ.டி ஃபிளாஷ் இடம்பெற்றுள்ளது. பின்புறம் வட்ட வடிவில் சீராக ஐந்து கேமரா லென்ஸ் மட்டும் காணப்படும் நிலையில், விரல்ரேகை சென்சார் இடம் பெறவில்லை. ஆகவே ஆப்பிள் நிறுவனம் போல 3டி ஃபேஸ் அன்லாக் அல்லது இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.9 இன்ச் குவாட் ஹெச்.டி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் OZO ஆடியோ உள்ளிட்டவை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.