5 ஆவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை… உயிர் தப்பிய அதிசயம் !

 

5 ஆவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை… உயிர் தப்பிய அதிசயம் !

5 ஆவது மாடியில் இருக்கும் இந்த குழந்தை அங்குள்ள பால்கனியில் இன்று காலை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அதனை வீட்டில் இருந்த யாரும் கவனிக்கவில்லை.

சென்னை சௌகார்பேட்டையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜெனிஷா என்ற 8 மாத குழந்தை உள்ளது. 5 ஆவது மாடியில் இருக்கும் இந்த குழந்தை அங்குள்ள பால்கனியில் இன்று காலை விளையாடிக் கொண்டிருந்துள்ளது.  அதனை வீட்டில் இருந்த யாரும் கவனிக்கவில்லை. அப்போது பால்கனியின் தடுப்புச் சுவரில் உள்ள ஓட்டை வழியே 5 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளது. குழந்தை மாடியில் இருந்து விழுவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ttn

அந்த மாடியின் கீழே ஒரு ஆக்டிவா ஸ்கூட்டி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. மாடியில் இருந்து விழுந்த அந்த குழந்தை நேராக அந்த ஸ்கூட்டின் சீட் மீது பட்டு தரையில் விழுந்துள்ளது. அந்த குழந்தையை உடனே சென்று தூக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள், குழந்தைக்குத் தலை மற்றும் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்ததால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அந்த குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துப் பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள், “கீழே நின்று கொண்டிருந்த ஸ்கூட்டியின் மீது மோதியதால் குழந்தை காயங்களுடன் உயிர் தப்பியது” என்று தெரிவித்துள்ளனர்.