5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது !

 

5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது !

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அங்கு பணியாற்றும் ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் அவலம் தொடர்ந்து வண்ணமே உள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தினமும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அங்கு பணியாற்றும் ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் அவலம் தொடர்ந்து வண்ணமே உள்ளது. இதற்குத் தண்டனை கடுமையாக்கப் படாதது தான் காரணம் என்று பல தரப்பு மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ttn

பொள்ளாச்சி அருகே உள்ள காட்டம்பட்டி என்னும் கிராமத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை செயல்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்களாம். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றும்  மாகாளியப்பன் (52) அங்குப் பயிலும் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று அவரை பற்றி விசாரித்துள்ளனர். அப்போது அவர் வெளியூர் சென்றிருப்பதாக மற்ற ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அம்மாணவிகளின் பெற்றோர்கள் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ttn

தகவல் அறிந்து அங்குச் சென்ற போலீசார், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து, தலைமை ஆசிரியர் மாகாளியப்பன் மீது வழக்குப்பதிவு செய்த நெகமம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.