5 ஆண்டுகளாக பள்ளி கழிவறையில் ரகசியமாக இருந்த கேமராக்கள்! அதிர்ச்சியடைந்த மாணவர்கள்!!

 

5 ஆண்டுகளாக பள்ளி கழிவறையில் ரகசியமாக இருந்த கேமராக்கள்! அதிர்ச்சியடைந்த மாணவர்கள்!!

பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு தெரியாமல் கழிவறையில் கேமராக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு தெரியாமல் கழிவறையில் கேமராக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லண்டனிலுள்ள பள்ளி ஒன்றில் புதிய தலைமையாசிரியராக ஹெலன் என்பவர் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து பள்ளி முழுவதுமுள்ள கட்டடங்கள், குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் முறையாக உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிவறையில் கேமராக்கள் மறைத்து வைத்திருப்பதை கண்டறிந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். 

School

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், கேமராக்களின் இணைப்புகளை துண்டித்து ஆய்வு செய்தனர். அவற்றிலிருந்த வீடியோக்கள் மாதந்தோறும் அழைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஐந்து ஆண்டுகளாக அங்கு கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் கழிவறையில் கமெராக்கள் பொருத்தப்பட்ட தகவல் அறிந்த பெற்றோர் கடும் கோபமடைந்துள்ளனர்.